டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/70cc1a5411b977ecb97e309e5543539e.jpg?width=836&height=470&resizemode=4)
ஜனவரி 26 இந்தியாவின் சுதந்திர தினத்தை ஒட்டி தற்போது இருந்தே டெல்லி முழுவதும் பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி காவல்துறை சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதாவது, ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும், இந்த குறிப்பிட்ட நாளில் பாராகிளைடிங், விமானம், மைக்ரோ லைட் விமானம், ஹாட் ஏர் பலூன், குவாட்காப்டர், பாரா மோட்டார், ஹேங் கிளைடர், யுஏவி, யுஏஎஸ் ஆகியவை தடை விதிக்கப்படும் என என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 15ம் தேதி வரை விமானத்திலிருந்து பாரா ஜம்பிங், பாரா மோட்டார், ரிமோட் பைலட் விமானம், சிறிய அளவிலான விமானம் ஆகியவற்றிற்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறும் பட்சத்தில் 188 பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.