1. Home
  2. தமிழ்நாடு

சப்தமாதர்களின் சிற்பம் கண்டெடுப்பு…!

1

பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் தென்பெண்ணை கரையோரம் உள்ள நிலத்தில் கோயில் கட்டுவதற்காக ஆற்றில் கரையில் மண் எடுத்தபோது மூன்று கற்சிற்பங்கள் கிடைத்துள்ளது.

இச்சிற்பம் 15ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர காலத்தை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் என ஆய்வில் கண்டறிந்தோம்.சப்தமாதர்கள் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, போன்றவராவர். சப்தமாதர்களுக்கு தொடக்க காலத்தில் படிமங்கள் ஏதும் உருவாக்கப்படாமல் ஏழு கற்களை பிரதிஷ்டை செய்து கடவுளாக எண்ணி வணங்கினர்.

முற்கால சோழர்கள் தாங்கள் எடுப்பித்த சிவாலயங்களில் அஷ்ட பரிவார தெய்வங்கள் என்று பெயரிட்டு சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், கணபதி, முருகன், மூத்ததேவி, சண்டிகேஸ்வரர், பைரவர் என அனைவருக்கும் திருஉருவம் செய்து தேவகோட்டத்தில் (கருவறை சுவற்றில்) அமைத்தனர். சோழர்கள் தாங்கள் எடுப்பித்த கோயில்களில் அனைத்திலும் சப்தமாதர்களுக்கு திருமேனி எடுத்து சிறப்பித்தனர்.

பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் கண்டெடுத்த சப்தமாதர்கள் மகேஷ்வரி, பிராமி, மற்றொரு சிற்பம் முகம் முற்றுபெறாத நிலையில் அடையாளம் காண முடியாமல் உள்ளது. மகேஷ்வரி, பிராமி சிற்பங்கள் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள். கண்டெடுத்த சிற்பங்கள் கை, முகம் போன்றவை சிறிது சிதைந்த நிலையில் உள்ளது என்று தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like