1. Home
  2. தமிழ்நாடு

இன்று பள்ளிகள் இயங்கும் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

1

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்தனர். தற்போது வரையிலும் கூட பொதுமக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், ரேஷன் கார்டு இல்லாத பொது மக்களுக்கும் தற்போது வரையில ரூ. 6000 நிவாரணத் தொகையும் கிடைக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு ஒரு வாரம் வரையிலும் தொடர் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக இன்று (ஜன.20) சனிக்கிழமை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு வகுப்புகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like