1. Home
  2. தமிழ்நாடு

வரும் 22 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

1

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை விழா வருகிற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அயோத்தியில் ரூ. 32 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் முக்கிய மைல்கல்லாக ராமர் கோவில் இருக்கும் என அம்மாநில முதல்வர் யோகி அதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், 500 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் இது நடந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜன. 22 ஆம் தேதி ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்க முதலமைச்சர் யோகி அதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் அன்றைய தினம் உத்திரபிரதேசம் முழுவதும் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் செயல்படாது என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like