#JUST IN : நாளை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/a083d5ba788b47c0e4a364fd844a40d8.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இதனடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்தது.
கடந்த ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ வரை மழை பெய்துள்ளது. இதனால் சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை பணிமுடிந்து வீடு செல்வோர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவு
அதே போல் கனமழை எச்சரிக்கையால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு