1. Home
  2. தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

1

மிக்ஜாம் புயல் வரும் டிசம்பர் 05- ஆம் தேதி நெல்லூர்- மசூலிப்பட்டணத்திற்கு இடையே கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், மரக்காணம், புதுச்சேரி, காரைக்காலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயலால் பாதிப்பும் ஏற்படும் பகுதிகள் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, வரும் டிசம்பர் 04- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like