நாளை மறுநாள் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை..!

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. அதே சமயம் அன்றைய தினம் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது.
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக மார்ச் 15ஆம் தேதியை (சனிக் கிழமை) வேலைநாளாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்