1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!

1

முருகனின் அறுபடை வீடுகளில்  ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆடிக் கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில், இந்தாண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று தொடங்கி வருகிற 11-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது

ஆடிக்கிருத்திகை நாளை 9-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு இரத்தினகிரி, திருத்தணி முருகன் கோயில்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு ஈடாக வரும் 12ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like