1. Home
  2. தமிழ்நாடு

பூப்பெய்திய மாணவியை படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதித்த பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்..!

Q

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது சுவாமி சித்பவானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி. இந்த தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவி 5 நாட்களுக்கு முன்பு பூப்படைந்துள்ளார்.
இந்த நிலையில் ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு சென்ற மாணவியை தனியாக படியில் அமர வைத்து கடந்த 7ஆம் தேதி அறிவியல் தேர்வு, 9ஆம் தேர்வு சமூக அறிவியல் தேர்வுகளை எழுத பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளனர்.
ஆனால் மாணவியின் தாயார் மாணவியை தனியே அமர வைத்து தான் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் மகள் எங்கு வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை காண அவர் பள்ளிக்கு சென்றபோது, அவரின் மகள் வெளியே படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுதப்பட்டது தெரியவந்தது. இதை அவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ வெளியே வேகமாக பரவிய நிலையில், இன்று காலை பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டி சிங் சம்பவம் நடைபெற்ற பள்ளியில் நிர்வாகத்தினருடனும் மாணவியின் பெற்றோரிடம் தனித்தனியாக விசாரித்தார். அதை அடுத்து மனைவியிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. கோவை தலைமை கல்வி மாவட்ட கல்வி அதிகாரி அங்கு விசாரணை நடத்தியுள்ளனர்.
தற்போது காவல் துறை, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் அந்த பள்ளியின் முதல்வர் ஆனந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like