1. Home
  2. தமிழ்நாடு

பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு : இனி நேரடியாக மறுகூட்டலுக்கான விண்ணப்ப முறை ரத்து..!

1

மாணவர்கள் முதலில் தங்கள் விடைத்தாளின் நகலைப் பெற்ற பின்பே மறுகூட்டலுக்காக விண்ணப்பிக்க முடியும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையை உடனடியாக செயல்படுத்தும் வகையில், தேர்வுத்துறை இயக்குநருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதை மாணவர்களே நேரடியாக சரிபார்த்து, பின்னர் தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தேர்வு முடிவுகள் வந்தவுடன் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடிந்தது.  பலர் விடைத்தாள் மதிப்பீட்டைத் தெரியாமல் மட்டுமே மறுகூட்டலுக்குப் போனதால் நேரம், பணம் வீணாகும் நிலை ஏற்பட்டது. இப்போதைய புதிய நடைமுறை, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like