இளையராஜா வீடியோவுக்கு முத்தம் கொடுத்த எஸ்.பி.பி! நெகிழ்ச்சி சம்பவம்!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவர் குணமடைந்து வர வேண்டும் என்று இசைஞானி இளையராஜா வெளியிட்ட வீடியோவுக்கு எஸ்.பி.பி முத்தமிட்டார் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் நெகிழந்து போய் உள்ளனர்.
இளையராஜாவும், எஸ்பிபியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இளையராஜா இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பு அவர் நடத்தி வந்த பாலவர் பிரதர்ஸ் கச்சேரிகளில் எஸ்பிபி முதன்மை பாடகர்.
80களில் இருவரும் சேர்ந்து வார்த்த இசை எதற்கும் ஈடாகாது. பாடல் உரிமம் விவகாரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்தபோதும்,சில மாதங்களிலேயே கசப்பு மறந்து அந்த இசைக்கூட்டணி மீண்டும் மலர்ந்தது.
எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, சீக்கிரம் எழுந்து வா பாலு என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இளையராஜா. அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி.,யிடம் அவரது மகன் சரண் காட்டினாராம்.
அவரிடமிருந்து போனை வாங்கிய எஸ்.பி.பி., அந்த வீடியோவை மீண்டும் போடச் சொல்லி இளையராஜாவை முத்தமிட்டாராம். இந்தத் தகவலை அந்த ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.
newstm.in