1. Home
  2. தமிழ்நாடு

எஸ்பிபி இந்த மூன்று நடிகர்களுக்கு மட்டும் பாட்டு பாடவில்லை!

எஸ்பிபி இந்த மூன்று நடிகர்களுக்கு மட்டும் பாட்டு பாடவில்லை!


தன் வாழ்நாளில் எஸ்பிபி மூன்று தமிழ் நடிகர்களுக்கு பாடல் எதுவும் பாடவில்லை. அதனால் அந்த மூன்று நடிகர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் எஸ்பிபி. மொத்தம் 16 மொழிகளில் பாடியுள்ளார் இவர். ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களுக்கு எஸ்பிபியின் குரல் அத்தனை பொருத்தமாக இருக்கும்.

ரஜினிகாந்தின் தொடக்க பாடல்கள் பெரும்பாலானவற்றை பாடியது எஸ்பிபிதான். அதனால் ரஜினிக்கு கிடைத்த ஸ்டார் அந்தஸ்தில் எஸ்பிபிக்கும் பங்கு உண்டு. பல நடிகர்களுக்காக பாடியுள்ள எஸ்பிபி தமிழில் மூன்று நடிகர்களுக்கு மட்டும் ஒரு பாடல் கூட பாடவில்லை.

அவர்கள் யார் என்றால் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால். இவர்கள் மூவருக்கும் அவர் எந்தப்பாடலும் பாடவில்லை. தற்போது அவர் மறைந்துள்ள நிலையில் மூவரும் ரொம்பவே வருத்தப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like