தனியார் மருத்துவமனைகளுக்கு கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..! சிடி ஸ்கேன்க்கு இவ்வளவு கட்டணமா..?

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார்.இந்திய அரசின் பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்திவரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் (TAPF) நல்லெண்ணத் தூதராக உள்ளார்.
"மகிழ்மதி" என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார்.. தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் டாக்டர் திவ்யா, தமிழ்நாடு மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறார்.அந்த கோரிக்கையில் உள்ளதாவது: "ஒரு வருடத்தின் மருத்துவ செலவுகள் 63 மில்லியன் இந்தியர்களை வறுமையில் தள்ளுகின்றன. எம்ஆர்ஐ, சிடி, அல்ட்ராசவுண்ட் போன்ற கண்டறியும் இமேஜிங் சேவைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இந்த விலைகள் சாமானியர்களால் முடிவதில்லை.
எம்ஆர்ஐ மற்றும் இமேஜிங் சேவைகளின் விலையைக் குறைக்க ஒரு தனியார் மருத்துவமனையைக் கோரியபோது, "எங்களிடம் சிறந்த இயந்திரங்கள் உள்ளன. ஏழைகள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும், இயந்திரங்களைப் பராமரிக்க எங்களுக்கு பணம் தேவை" போன்ற பரிதாபமான விளக்கங்களை நிர்வாகம் எங்களுக்கு வழங்கியது.
எனவே, தனியார் மருத்துவமனைகள் எம்.ஆர்.ஐ. மற்றும் பிற இமேஜிங் சேவைகளின் விலையில் 30 சதவீதம் குறைக்கக்கோரி எனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்களுடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது" என்று டாக்டர் திவ்யா தெரிவித்துள்ளார்.