1. Home
  2. தமிழ்நாடு

சாத்தான் குளம் சம்பவம் !! கொடூர சம்பவத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் !! ஷிகர் தவான் டிவிட்

சாத்தான் குளம் சம்பவம் !! கொடூர சம்பவத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் !! ஷிகர் தவான் டிவிட்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சாத்தான் குளம் சம்பவம் !! கொடூர சம்பவத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் !! ஷிகர் தவான் டிவிட்

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், சாத்தான்குளத்தில் சிறையில் இருந்த விசாரணைக் கைதிகளான தந்தை, மகனுக்கு நேர்ந்த கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like