1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த வாரத்தில் சசிகலா விடுதலை! வெளியான பரபரப்பு தகவல்!

அடுத்த வாரத்தில் சசிகலா விடுதலை! வெளியான பரபரப்பு தகவல்!



சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 10 கோடி அபராதத்தொகையை செலுத்த அனுமதிக்கக் கோரி பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோரும் சிறையில் உள்ளனர். அதில் வி.என். சுகாதரன் சார்பில் அவருக்கான அபராத்தொகை நீதிமன்றத்தில் ஏற்கெனவே செலுத்தப்பட்டு விட்டது.
இந்த நிலையில், வி.கே. சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்தது குறிப்பிடத்க

இந்த நிலையில், இன்னும் ஒரே ஒரு வாரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கர்நாடகா சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “கர்நாடக மாநில சிறை விதிகளின்படியும் சிறைக் கைதிகள் நன்னடத்தையின்படியும், எல்லா சிறைக் கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். இதில், சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாகவே கருதவேண்டும்.

எனவே, ஒரு வாரத்தில் சசிகலா வெளியே வருவதற்கு வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது" என நம்பிக்கை தெரிவித்தார். இந்த தகவலால் சசிகலாவின் உறவினர்களும், அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like