சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!
சென்னை தீவுத்திடல் பகுதியில் பட்டாசு விற்பனையாளர் சங்கம் சார்பில் 30 கடைகள் போடப்பட்டுள்ளன.
கடைகளை அமைத்து பட்டாசுகளை அடுக்கி வைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், பட்டாசு விற்பனையை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைக்கவுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு உத்தரவின்படி ஆபத்தான பட்டாசுகளை தவிர்த்து பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.