சைதாப்பேட்டை நாதக செயலாளர் விலகல்..!

நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜ்குமார் கட்சியில் இருந்து விலகி சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
13 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாக செயலாற்றி வந்த அவர், திடீரென அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். கட்சிக்காக உண்மையாக உழைக்க நினைப்பவர்கள் ஓரம் கட்டப்படுவதாக ராஜ்குமார் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.