மகனின் உடலை கண்டுபிடித்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு ரூ.1 கோடி வழங்குகிறார் சைதை துரைசாமி..!
வெற்றி துரைசாமியின் உடலை மீட்ட சுந்தர் நகர் டைவர்ஸ் யூனியனைச் சேர்ந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு தான் அறிவித்தபடி ஒரு கோடி ரூபாயை வழங்க உள்ளதாக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அவரது கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஆனால், வெற்றி துரைசாமியைக் கண்டுபிடிக்க முடியாததால், தனது மகனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விபத்து நடந்த எட்டு நாள்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டது.பாறையின் அடியில் சிக்கியிருந்த நிலையில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.