சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற கவிஞர் முனவ்வர் ராணா காலமானார்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/623e1d6c0437e4716cb5f996852ecac3.jpg?width=836&height=470&resizemode=4)
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த புகழ்பெற்ற கவிஞர் முனவ்வர் ராணா(71), லக்னோவில் காலமானார். உருது இலக்கியம் மற்றும் கவிதைகளில் இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக பரவலான பாராட்டைப் பெற்றார். இவர் 2014ல் சாகித்ய அகாடமி உட்பட எண்ணற்ற கௌரவங்களைப் பெற்றுள்ளார். இவரது கவிதை பல மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவிஞருக்கு மனைவி, நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.