சோகம்..! உலகிலேயே மிக வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் சாலை விபத்தில் மரணம்..!
மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரமளிக்கிறது. அவர் உலகிலேயே அதிக வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பட்டத்தைப் பெற்றவர்.ரன்னிங் பாபா, சீக்கிய சூப்பர்மேன் என அழைக்கப்படும் ஃபௌஜா சிங், . இந்த வயதில் இப்படியும் ஓட முடியுமா? என்று பல்வேறு அதியசங்களை நிகழ்த்திக் காட்டினார். ஓட வேன்டிய 20, 25 வயதில் வீட்டில் முடங்கிக் கிடந்த இளைஞர்களுக்கு இந்த சீக்கிய சூப்பர் மேன் உத்வேகமாக திகழ்ந்தார். மேலும் தனது வயதுடைய முதியவர்களுக்கும் 'எந்த வயதிலும் சாதிக்கலாம்' என தெம்பூட்டினார். தன்னுடைய அசாத்திய திறமை காரணமாக அடோபோஸ் நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடித்து உலகப்புகழ் பெற்றவரிவர்.
இந்நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த பவுஜா சிங் ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாஸ் கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர், படுகாயங்களுடன் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். 'தலைப்பாகை சூறாவளி' என அழைக்கப்படும் பவுஜா சிங் மறைவு பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியது.
பவுஜா சிங் முழு சீக்கிய சமூகத்திற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்தார் என சீக்கிய மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
89 வயதில் சாலை விபத்தில் மனைவியையும், மகனையும் இழந்த பிறகு அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்காக மாரத்தான் ஓட தொடங்கி மக்களிடையே நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் அடையாளமாக மாறினார் பவுஜா சிங்.