சோகம்..! ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b1fba47e374f5c930989de43f3b73e5f.webp?width=836&height=470&resizemode=4)
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் பிரேமதாஸ் (42). இவரது மகள் ஆதிஷா (7), நேற்று பிற்பகல் 2 மணியளவில் தந்தையும் மகளும் தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுக பகுதிக்கு பைக்கில் வந்தனர். பின்னர் இருவரும் கடற்கரையோரத்தில் நின்று கடலை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கினர். கடற்கரையின் அருகில் இருந்தவர்கள் பிரேமதாஸை மீட்ட நிலையில் சிறுமி ஆதிஷாவை அலை இழுத்துச் சென்றது. ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று தனது தந்தையுடன் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள் சிறுமியின் உடலை மீட்டனர்.