1. Home
  2. தமிழ்நாடு

ரூ.2000, இலவச மளிகைப் பொருள்கள் தொகுப்பு!! இன்று முதல் டோக்கன் விநியோகம்!!

ரூ.2000, இலவச மளிகைப் பொருள்கள் தொகுப்பு!! இன்று முதல் டோக்கன் விநியோகம்!!


கொரோனா இரண்டாவது தவணை நிவாரணத் தொகையாக ரூ.2,000 , 14 மளிகைப் பொருள்களை வழங்குவதற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

ரூ.2000, இலவச மளிகைப் பொருள்கள் தொகுப்பு!! இன்று முதல் டோக்கன் விநியோகம்!!

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரா்கள் அனைவருக்கும் வரும் ஜூன் 15 முதல் 2ஆம் கட்ட கொரோனா நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருள்கள் விநியோகம் தொடங்கவுள்ளது. அடுத்தடுத்த நாள்களில், அரிசியுடன் கூடிய 14 வகையான மளிகைப் பொருள்களும் வழங்கப்படவுள்ளன.

அந்தந்த ரேஷன் கடைகளில் இதற்கான டோக்கன் இன்று முதல் (ஜூன் 11) முதல் வரும் 14ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்ய உள்ளனர். நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக காலை 8 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்பட உள்ளன. இதன் மூலம் அரிசி கார்டுதாரர்கள் மொத்தம் 2.11 கோடி குடும்பத்தினர் பயன் அடைவர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

4 வகை மளிகைப்பொருட்கள் விபரம்
கோதுமை மாவு-1 கிலோ
உப்பு -1 கிலோ
சர்க்கரை-500 கிராம்
உளுத்தம்பருப்பு- 500 கிராம்
புளி-250 கிராம்
கடலை பருப்பு-250 கிராம்
கடுகு-100 கிராம்
சீரகம்-100 கிராம்
மஞ்சள் தூள்-100 கிராம்
மிளகாய் தூள்-100 கிராம்
டீத்தூள் -100 (2 பாக்கெட்டுகள்)
குளியல் சோப்-1 (125 கிராம்)
சலவை சோப்-1 (250 கிராம்) ஆகிய 14 பொருட்கள் சிறப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like