1. Home
  2. தமிழ்நாடு

தீவிரவாத தாக்குதலில் பலியான குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்+ அரசு வேலை..!

Q

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனா். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் தங்கள் குடும்பங்களுடன் விடுமுறைக்கு வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் சந்தோஷ் ஜக்தலே மற்றும் கவுஸ்துப் கனவதே (இருவரும் புனேவைச் சேர்ந்தவர்கள்), மூன்று தாய்வழி உறவினர்கள் ஜோஷி, சஞ்சய் லெலே, மற்றும் அதுல் மோனே (அனைவரும் டோம்பிவ்லியைச் சேர்ந்தவர்கள்) இதுதவிர பன்வேலைச் சேர்ந்த திலீப் டிஸ்லே ஆகியோர் அடங்குவர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் பலியான மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை தருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல் அமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ்," பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மகாராஷ்டிராவை சேர்ந்த 6 பேர் பலியாகினா்.

அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் பலியானோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி மகாராஷ்டிராவை சேர்ந்த 6 பேரின் குடும்பத்திற்கு இந்த நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கப்பட உள்ளது. 

Trending News

Latest News

You May Like