1. Home
  2. தமிழ்நாடு

இனி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுக்கு ரூ.3 கோடி..!

1

தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும் என சட்டமன்ற அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் ரூ. 2 கோடியை மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்கள் செலவிட அனுமதி இருந்தது. மீதமுள்ள ரூ.1 கோடியை அரசு பரிந்துரைக்கும் திட்டத்திற்குச் செலவிட வேண்டும். இனி ரூ.3 கோடி தொகுதி வளர்ச்சி நிதியையும் எம்எல்ஏ- க்கள் நேரடியாக திட்டங்களுக்கு செலவிடலாம் என்று அவர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொருள் சேவை வரியையும் நீக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like