1. Home
  2. தமிழ்நாடு

இவர்களை பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் !

Q

சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் பகுதி வழியாக, இந்திய விமானப் படை வீரர்கள் இரண்டு வாகனங்களில் சென்றனர். விமானப் படை தளத்துக்கு சென்ற அவர்களது வாகனங்கள் மீது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் ஐந்து விமானப் படை வீரர்கள் காயமடைந்தனர்.
அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இத்தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், 2 பேரின் மாதிரி புகைப்படங்களை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.மேலும் இவர்கள் பற்றி தகவல் தந்தால், 20 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும்.

Trending News

Latest News

You May Like