1. Home
  2. தமிழ்நாடு

அரிசி மூட்டையில் பதுக்கப்பட்ட 15 லட்சம் பணம்..! பிரியாணி அரிசி என நினைத்து விற்ற மைத்துனர்..!

1

நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் அரிசி மண்டி நடத்தி வருகிறார். நெய்வேலி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பூபாலன் என்பவர் காலை 10 மணி அளவில் அரிசி வாங்க வந்தார். அப்போது கடையில் இருந்த சீனிவாசனிடம் 16 கிலோ பிரியாணி அரிசி வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசனும் கடையிலிருந்து 16 கிலோ அரிசியை எடை போட்டு பூபாலனிடம் கொடுத்து உள்ளார். பின்னர் சண்முகம் 10:30 மணி அளவில் கடைக்கு வந்தபோது கடையில் இருந்த அரிசி மூட்டைகளை பார்த்தபோது அதில் அந்த பதினாறு கிலோ அரிசி மூட்டை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சீனிவாசனிடம் அரிசி மூட்டை எங்கே என கேட்டபோது அதை விற்று விட்டேன் என கூறினார். உடனே சண்முகம் சீனிவாசனிடம் அதில் 15 லட்சம் பணம் வைத்திருந்தேன் கூற இருவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 
உடனே விற்றது யார் என்பதை சிசிடிவியில் பார்த்து, உடனடியாக அவர் வீட்டிற்கு ஓடினர். பின்னர் வீட்டில் இருந்த அவருடைய மகளிடம் விசாரித்தனர். அவரும் மூட்டையில் இருந்தது இது தான் என கூறி 10 லட்சம் பணத்தை எடுத்து சண்முகத்திடம் கொடுத்தார். இதில் நான் 15 லட்சம் வைத்திருந்தேன் 10 லட்சம் தான் கொடுக்கின்றீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தாட்சாயினி அதில் 10 லட்சம் தான் பணம் இருந்தது என கூறினார். 

இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் சண்முகம் 5 லட்சம் பணத்தை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வடலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like