1. Home
  2. தமிழ்நாடு

வங்கி கணக்கில் ரூ. 1000 வந்ததா? செக் பண்ணுங்க..!

Q

மகளிர் உரிமைத் திட்டத்துக்கான ₹1000 உதவித் தொகை தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1000 வரவு வைக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், இன்று வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இன்று மாலைக்குள் அனைவருக்கும் வந்துவிடும். 

ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. உங்கள் கணக்கில் இந்த மாத தவணை வந்துவிட்டதா? செக் பண்ணுங்க.

Trending News

Latest News

You May Like