1. Home
  2. தமிழ்நாடு

திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி!!


ஃபேஸ்புக் மூலம் பழகி வெளிநாட்டு பெண்ணை திருமண செய்து கொள்வதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சைப்ரஸ் நாட்டில் வசித்து வரும் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றை அனுப்பினார். அதில் திருவான்மியூரில் வசித்து வரும் அருண் பிரகாஷ் என்பவர் தன்னிடம் ஃபேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமாகி பழகி வந்ததாகதெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நபர் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி தன்னிடமிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி!!

அதன் பின்பு தன்னுடன் தொடர்பை துண்டித்துக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ள அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விவரம் சமீபத்தில் தனக்கு தெரியவந்ததால் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரும்படி புகாரில் தெரிவித்திருந்தார்.

விசாரணையில் சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சைப்ரஸ் நாட்டில் வசித்து வரும் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று ஏமாற்றியது ஆதாரங்கள் மூலம் தெரிய வந்தது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி!!

அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று அருண் பிரகாஷை அவரது வீட்டில் வைத்து கைது செய்து அவரிடமிருந்து பணம் மோசடிக்குப் பயன்படுத்திய வங்கி கணக்கு, .டி.எம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பின் போலீசாரால் அருண் பிரகாஷ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

newstm.in

Trending News

Latest News

You May Like