எவரெஸ்ட் சிகரம் ஏறினால் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்..!

இந்தியாவின் மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் ஏராளமான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மலையேற்ற விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்றதாக உள்ளன. பயிற்சிபெற்ற மலையேற்ற வீரர்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் பயணம் செய்து சிகரம் தொட விழைகின்றனர். எனவே, பல்வேறு மலையேற்ற வீரர்களின் பெருங்கனவான, உலகில் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர் /வீராங்கனைகளுக்கு 10 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.