1. Home
  2. தமிழ்நாடு

RR அணியின் முன்னணி வீரர் திடீர் விலகல்..!

1

ஐ.பி.எல்.சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ராஜஸ்தானால் வெறும் 12 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் அந்த அணி நடப்பு சீசனில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. இதனால் எதிர்வரும் போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற ராஜஸ்தான் போராட உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார். நடப்பு சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய சந்தீப் சர்மா 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 

சந்தீப் சர்மா மோசமான சாதனை:

(ஏப்.16) அன்று டெல்லி கேபிட்டல்ஸ் உடனான ஆட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட ஓவர் வீசிய பவுலர்களில் ஒருவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா. 

டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார். அந்த ஓவருக்கு முன்பு வரை 3 ஓவர்கள் வீசிய சந்தீப் சர்மா வெறும் 14 ரன்கள் மட்டும் தான் கொடுத்திருந்தார்.கடைசி ஓவரில் 19 ரன்கள் கொடுத்ததன் மூலம் மொத்தமாக 4 ஓவர்களில் 33 ரன்களை தாரை வார்த்தார். 

இதற்கு முன்னதாக ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் ஒரே ஓவரில் 11 பந்துகள் வீசியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like