ஆர்.ஆர்.ஆர் பட கேமராமேனின் மனைவி காலமானார்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/097ca33fb773f5389c54bc933f67c53a.jpeg?width=836&height=470&resizemode=4)
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆர்ஆர்ஆர்’.
இந்நிலையில், அருந்ததி, நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான கே.கே.செந்தில் குமாரின் மனைவி ரூஹி காலமானார்.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ரூஹியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சமினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் மனைவியை பிரிந்து வாடும் செந்தில் குமாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ஒளிப்பதிவாளர் செந்தில் குமார், ரூஹியை திருமணம் செய்து கொண்டார். ரூஹி ஒரு யோகா டீச்சர் என்பதும் அவர் ஹைதராபாத்தில் யோகா வகுப்புகள் நடத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.