1. Home
  2. தமிழ்நாடு

கையை அறுத்து, ஆம்புலன்ஸூக்கு தீ வைத்து போலீஸூக்கு போக்கு காட்டிய  ரவுடி!

கையை அறுத்து, ஆம்புலன்ஸூக்கு தீ வைத்து போலீஸூக்கு போக்கு காட்டிய  ரவுடி!


ஆம்புலன்ஸூக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரவுடியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், ஓங்கோலை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் கடந்த சில நாட்களாக 108 ஆம்புலன்சுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்து வந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர்  ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.

திடீரென அதிகாலை 4 மணியளவில் காவல் நிலையத்திலிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்த அவர்,  கண்ணாடி துண்டை எடுத்து தனது கையை கிழித்துக் கொண்டார். இதனையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.

கையை அறுத்து, ஆம்புலன்ஸூக்கு தீ வைத்து போலீஸூக்கு போக்கு காட்டிய  ரவுடி!

பத்மாவதி டவர்ஸ் அருகே சென்றபோது சுரேஷ், தன்னிடமிருந்த தீப்பெட்டி மூலம் ஆம்புலன்சுக்கு தீ வைத்தார். அப்போது, ஆம்புலன்சில் இருந்த கிருமிநாசினியில் பற்றிய தீ ஆம்புலன்ஸ் முழுவதும் பற்றி எரிந்தது. போலீசார் வெளியில் குதித்து தப்பினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுரேஷ் தப்ப முயன்றார். ஆனால் காவல்துறையினர் விரட்டிச்சென்று ரவுடியை சுற்றி வளைத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like