வியாசர்பாடியில் ரவுடி தொண்டராஜன் வெட்டிக் கொலை..!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜி என்கிற தொண்டை ராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி ராஜி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சத்தியமூர்த்தி நகர்ப் பகுதியில் மர்ம நபர்கள் ரவுடி ராஜியை வெட்டிக் கொன்றுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனால் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது