1. Home
  2. தமிழ்நாடு

இறுதிப்போட்டிக்கு பின்னர் ரோஹித் சர்மா பேட்டி..!

1

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை சுருட்டி வீசி கோப்பையை கம்பீரமாக அள்ளியது இந்தியா.ஆனால் இந்த தொடரில் இந்திய வீரர்களில் முக்கியமானவர்கள் சிலர் காயமடைந்துள்ளது சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இறுதிப்போட்டிக்கு  பின்னர் செய்தியாளர்களிடம் ரோகித் பேசுகையில், “ஆசியக்கோப்பையில் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, உலகக்கோப்பைக்கான போட்டியில் வீரர்களை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.எனினும் வரும் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை சந்திக்க உள்ளது இந்தியா. அதற்குள் அக்சர் பட்டேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடற்தகுதி பெற்று விடுவர் என்று நம்புகிறோம்.

அக்சரை பொறுத்தவரை, அவரது மணிக்கட்டு மற்றும் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை இழக்க இந்தியா விரும்பவில்லை. அவர் காயம் குணமாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகலாம்.அதன் காரணமாக அவரால் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா உட்பட முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது. எனினும் நாங்கள் அக்சருக்காக காத்திருப்போம்.

ஆசியக்கோப்பையில் காயமடைந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக, சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுக்கு தயாராகி வந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் தற்காலிகமாக சேர்க்கப்பட்டார். எனினும் அனுபவ சுழற்பந்துவீச்சாளரும், ஆல்ரவுண்டருமான அஸ்வின் ரவிச்சந்திரன் இந்தியாவின் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. 

Trending News

Latest News

You May Like