விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது ரோகிணி ராக்கெட்..!

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க 'ஆர்.எச்.200 சவுண்டிங்' ரோகிணி ராக்கெட் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் குலசேகரன்பட்டினத்தில்
தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் அனைத்துமே ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் ஏவப்படுகிறது. காரணம் இந்த இடம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக இருக்கிறது. ஆனால் இதைவிட பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக ஒரு இடம் இந்தியாவில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டனம் பகுதிதான். இங்கிருந்து ராக்கெட்களை ஏவும்போது, அது இலக்கை குறைந்த எரிபொருளை கொண்டு அடைந்துவிடும்.