1. Home
  2. தமிழ்நாடு

ரிதன்யா வழக்கு: மாமியார் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு..!

1

ஜூலை 28ஆம் தேதி சேலையூர் அருகே உள்ள மொண்டிபாளையம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில் ரிதன்யா சடலமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் ரிதன்யா தென்னை மரத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.மேலும் ரிதன்யா போனை ஆய்வு செய்ததில் தற்கொலைக்கு காரணம் வரதட்சணை கொடுமை என்பது தெரியவந்தது. மேலும் ரிதன்யா தனது தந்தைக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.
 

அதில் தன்னுடைய மாமியார் சித்ரா தேவி, மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கணவர் மனதளவிலும் உடலளவிலும் கொடுமைப்படுத்தி யதாகவும், இதற்கு மேல் தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும், தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கூறி உள்ளார். மேலும் தன்னுடைய இறப்பிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் கணவர் தான் என்று கூறினார் .கடைசியாக தன்னுடைய தந்தைக்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருமணமான 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ரிதன்யா அளித்த மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கணவர் கவின் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.


ஆனால் சித்ரா தேவியின் உடல்நிலை காரணம் காட்டி காவல்துறையினர் அவரை கைது செய்யாமல் வீட்டிலேயே இருக்க வைத்தனர். தொடர்ந்து ரிதன்யா குடும்பத்தினர் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக மாமியார் சித்ராதேவி கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் மாமனார் ஆகியோர் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் இடையயீ ட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிதன்யா பெற்றோர் தரப்பில் இந்த வழக்கிற்கு அரசியல் ரீதியாக கவின் குமார் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்பட்டது. மேலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று கூறினர்.


தனது மகள் ரிதன்யாக உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் மனரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது தெரிந்து அவர்களின் பெற்றோர் கவின் குமாரை கண்டிக்கவில்லை என்று குற்றம்ச்சாட்டினர். இரு தரப்பு வாதங்களை கேட்டு நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியின் திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது அப்போது ஜாமின் மானம் மீதான விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்

Trending News

Latest News

You May Like