1. Home
  2. தமிழ்நாடு

ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல்: ரிஷி சுனக் அறிவிப்பு..!

1

இங்கிலாந்து நாட்டை பொறுத்தவரை அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் அங்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமர் சுனக், இது 2024-ன் பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை கூறியிருந்தார். 

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் இதுவாகும். கடந்த அக்டோபர் 2022-ல் நடந்த வாக்கெடுப்புக்கு பிறகு அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பிரதமரானார். 

வரும் ஜூலையில் நடைபெற உள்ள இங்கிலாந்து தேர்தல் என்பது 2016-ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெறவுள்ள மூன்றாவது பொதுத் தேர்தலாகும்.

Trending News

Latest News

You May Like