ரிஷப் பண்ட் இஸ் பேக்..! வைரலாகும் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட், கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு சொகுசு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் ரிஷப் பண்ட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஓராண்டுகள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன் படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் ரிஷப் பண்ட்.
இது ஒருபுறமிருக்க, அவர் தன்னை மீட்டுக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கிய ரிஷப் பண்ட், சிறு சிறு உடற்பயிற்சிகள், நீச்சல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக பெங்களுரூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பை 2023 நடக்க உள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில், தனது உடல்தகுதியை நிரூபிக்கும் வகையில், பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Watch :Rishabh Pant's first batting video since car crash breaks internet #RishabhPant #CricketTwitter📷 #cricketfans #IndianCricketTeam #15August #viralvideo #HimachalPradesh #HimachalDisaster #Gadar2ManiaContinues #Chandrayaan #IndianFlag #Mathura #TejRan #onted #AsiaCup pic.twitter.com/KdH07OyQgu
— Tejasswi Prakash (@Tejasswi22) August 16, 2023
இதற்கு முன்னதாக கடந்த சின தினங்களுக்கு முன்பு கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 50 ஓவர்கள் கொண்ட பயிற்சியை மேற்கொண்டனர். இதனை ரிஷப் பண்ட் வேடிக்கை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் நேற்று தனது பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.