சோகத்தில் உறவினர்கள்..! உயிரிழந்த தந்தை சடலம் முன் திருமணம் செய்து கொண்ட மகன்...!

விருத்தாசலம், கவணை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு அப்பு என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக, செல்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று அவர் உடல்நல குறைவால் காலமானார்.
தந்தை மறைவையடுத்து கதறி அழுத அப்பு, அவரது சடலத்தின் முன்பு நின்று கண்ணீர் மல்க விஜயசாந்தி என்பரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தந்தையின் பாதங்களை தொட்டு ஆசி பெற்றனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதன் பிறகு, செல்வராஜ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
உயிரிழந்த தனது தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்... கண்ணீர் ததும்ப மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி தனது தந்தையின் பாதம் தொட்டு ஆசி பெற்ற மகனை கண்டு கலங்கிய ஊர் மக்கள்#Cuddalore | #Virudhachalam | #Marriage | #PolimerNews pic.twitter.com/zOfh5U4q4r
— Polimer News (@polimernews) April 17, 2025
உயிரிழந்த தனது தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்... கண்ணீர் ததும்ப மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி தனது தந்தையின் பாதம் தொட்டு ஆசி பெற்ற மகனை கண்டு கலங்கிய ஊர் மக்கள்#Cuddalore | #Virudhachalam | #Marriage | #PolimerNews pic.twitter.com/zOfh5U4q4r
— Polimer News (@polimernews) April 17, 2025