1. Home
  2. தமிழ்நாடு

காரில் ஏற்ற மறுத்த உறவினர்… தீவைத்து எரித்த கொடூரம்!

காரில் ஏற்ற மறுத்த உறவினர்… தீவைத்து எரித்த கொடூரம்!


காரை ஓட்டிப்பார்க்க தராத ஆத்திரத்தில் கார்மீது பெட்ரோல் ஊற்றி உறவினர் ஒருவர் தீவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சென்னை சின்னமலை பகுதியை டோமினிக், கார் ஒன்றை வாங்கினார். அப்போது டோமினிக் மனைவியின் தம்பி மகனான ஜர்விஸ் என்பவரை டோமினிக்கின் மகன் டார்வின் காரில் ஏற்றமறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜர்விஸ் கீழே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார்.

இதனால் டோமினிக் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மீது புகார் அளித்தார்.இதனை தொடர்ந்து ஜர்வீசுக்கும், டார்வீனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டோமினிக் வீட்டருகே காரில் நண்பர்களுடன் வந்தபோது, ஜர்விஸ் திடீரென்று மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பிறகு தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து டோமினிக்கின் கார் மீது ஊற்றி கொளுத்திவிட்டு தப்பியோடினார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் எரிந்து கொண்டிருந்த காரை உடனடியாக அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like