இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்: பதிவுத்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆவண பதிவு முடியும் வரை அலுவலகம் இயங்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் ஆவணப்பதிவுக்கு விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், நாளை பணியாற்றும் பதிவுத்துறை அலுவலர்களுக்கு மாற்று விடுப்பு தரப்படும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பிப்.3ம் தேதி திங்கள் அன்று முகூர்த்த நாள் என்பதால், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.
அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்குப்பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.