பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் !! அரசு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. மத்திய , மாநில அரசுகள் எவ்வளவு தான் தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் , கொரோனா குறையவில்லை. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
டெல்லி மாநிலம் 2 வது இடத்தில் உள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1372 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில் 20 ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் எனவும் , பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
1 மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை மட்டும் பதிவு செய்யபடும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவராக இருந்தால் பதிவு பணிகள் செய்யப்படாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலகம் இயங்கினால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.
Newstm.in