1. Home
  2. தமிழ்நாடு

தொடர்ந்து 3 நாட்கள் பதிவாளர் அலுவலகங்கள் விடுமுறை..!

1

தமிழகம் முழுவதும் மொத்தம் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. மொத்த பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் அரசு விடுமுறை தினங்களில் முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் பணிகளுக்கு செல்லும் பொது மக்களின் நலன் கருதியும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மொத்தம் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள் மட்டும் விடுமுறை தினங்களிலும் செயல்பட்டு வந்தது. நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

இதன் காரணமாக அரசு நவம்பர் 13 ஆம் தேதியும் பொது விடுமுறை நாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்பும் பதிவுத்துறை அலுவலர்களுக்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் 11ஆம் தேதி விடுமுறை அளிக்க பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் பதிவாளர் அலுவலகங்கள் விடுமுறையில் இருக்கும். எனவே பொதுமக்கள் தங்கள் பணிகளை விடுமுறைக்கு முன்னதாக முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Trending News

Latest News

You May Like