1. Home
  2. தமிழ்நாடு

ரெட் அலர்ட்.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க மக்களே..!

ரெட் அலர்ட்.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க மக்களே..!


தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இதற்கிடையில், தென் தமிழகத்தில் இன்று மதியம் கனமழை பெய்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. தூத்துக்குடியில் 16 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 18 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடப்பட்டிருந்த ஆரஞ்ச் அலர்ட் தற்போது ரெட் அலர்ட் ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Trending News

Latest News

You May Like