1. Home
  2. தமிழ்நாடு

7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்!!

1

கத்திரி வெயில் துவங்கவதற்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் வெப்ப அலை கடுமையாக வீசி மக்களை வட்டி வதைக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்வதால் உஷ்ணம் சற்று தனிந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களிலும் மழை பெய்யும் என்றும், வெப்ப அலை தணிந்து காணப்படும் என்றும் வானிலை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. தற்போது புதிய செய்தியாக கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னேற்பாடுகளை செய்துக் கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மக்கள் கவனமுடன் இருக்குமாறும் வானிலை மையம் தெரிவிக்கிறது. இம்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like