தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரெட் அலர்ட்
* கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று (மே 26)அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* திருநெல்வேலி, தென்காசி தேனி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (மே 26) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.