1. Home
  2. தமிழ்நாடு

பீர் ஆலையை மூடுவதற்கான காரணம் நியாயமாக இல்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

1

தமிழகத்தில் திருவள்ளுவர் மாவட்டம் குத்தம்பாக்கம் மற்றும் அரண்வாயில் பகுதிகளில் பீர் தயாரிக்கும் ஆலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசின் விதிமுறைகளை பீர் தயாரிக்கும் ஆலைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி ஆலைகளை மூடும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி 20ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும், மின் இணைப்பை துண்டிக்கும் படியும் மின்சார வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த உத்தரவு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பீர் தயாரிக்கும் ஆலைகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், பீர் தயாரிக்கும் ஆலைகளில் அமோனியா, கார்பன் டை ஆக்சைடு சேமிப்புக்கு உரிய வெப்பம் நிலையை பராமரிக்கவில்லை எனவும், மின் இணைப்பை துண்டித்தால் அம்மோனியா வாயு கசிவிற்கு வாய்ப்பு உள்ளதாகவும் பீர் ஆலை மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில், பீர் ஆலையை மூடுவதற்கான காரணம் நியாயமாக இல்லை எனக் கூறி மின் இணைப்பை துண்டிக்க கூடாது என மின்வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைகளை மூட பிறப்பித்த உத்தரவுக்கு மூன்று வாரம் இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like