பாலத்தில் காரை மறித்து ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை.. நண்பர்களிடம் விசாரணை !

சென்னை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (32), ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று படப்பை அடுத்த காவனூர் பகுதியில் வீட்டுமனையை பார்வையிட காரில் சென்றுள்ளார். அவருடன் நண்பர்களான ராமு, ஆறுமுகம், ராஜா ஆகியோரும் சென்றுள்ளனர். பின்னர் திரும்பிய அவர்களின் கார் படப்பை ஒரத்தூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றப்போது வேகமாக வந்த மற்றொரு கார் அவர்களை வழிமறித்தது.
அதில் இருந்து இறங்கிய 5 பேர் கையில் அரிவாளுடன் ஓடிவந்தனர். இதனை கண்ட சதிஷ் உள்ளிட்டோர் சிதறி ஓடினர். எனினும் அந்த கும்பல் சதீஷை சுற்றி வளைத்து தலை, கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் சதிஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சதிஷ் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமா அல்லது தொழில்போட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டார என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் காரில் வந்த சதிஷ் நண்பர்களான ராமு, ஆறுமுகம் ஆகியோருடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜாவை தேடி வருகின்றனர்.
newstm.in