1. Home
  2. தமிழ்நாடு

பரிட்சைக்கு ரெடியா ? இன்று எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொதுநுழைவுத் தேர்வு..!

1

திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. எம்சிஏ படிப்புக்கு 1,241 பேர், எம்பிஏ படிப்புக்கு 1,319, எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு 305 பேர் என மொத்தம் 2,865 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். அவர்களுக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி வரையில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. 

தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டுடன் தேர்வில் பங்கேற்கலாம் என உறுப்புக்கல்லூரியின் புலமுதல்வர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like