1. Home
  2. தமிழ்நாடு

ரிசர்வ் வங்கி அதிரடி : இனி பென்சன் வாங்குவோருக்கு எந்த பிரச்சினையும் இருக்காது..!

1

ஓய்வூதியதாரர்களிடமிருந்து அவர்களின் பென்சன் பணம் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது  இந்திய ரிசர்வ் வங்கி.குறிப்பாக, இந்த விதி 2008 அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து தாமதமான ஓய்வூதிய பேமெண்டுகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.


ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய இருப்பை வரவு வைக்கும் தேதியின்படி வங்கிகள் வட்டித் தொகையை கணக்கில் வரவு வைக்க வேண்டும். இதற்காக, ஓய்வூதியதாரர் தனித்தனியாகக் கோரிக்கை எழுப்ப வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, ஓய்வூதியம் வழங்குவதில் இந்தப் புதிய விதிம்றை அடுத்த மாதத்திலிருந்தே அமல்படுத்தப்படும். மேலும் அதன் பலன்களைப் பெறுவதற்கு ஓய்வூதிய உத்தரவுகளின் நகலை உடனடியாகப் பெறுவதற்கான வழிமுறையைத் தயாரிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஓய்வூதியதாரர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் வங்கிக்கு வர முடியாவிட்டாலோ அல்லது தங்கள் பெயரில் கையொப்பமிட முடியாவிட்டாலோ இரண்டு சாட்சிகள் (அவர்களில் ஒருவர் வங்கி அதிகாரியாக இருக்க வேண்டும்) முன்னிலையில் கட்டைவிரல் ரேகை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.


ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வீட்டிலேயே ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் வசதியை அனைத்து வங்கிகளும் வழங்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்தவுடன் அவர்களின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களும் செல்லுபடியாகும் என்று கருதப்படும். சம்பந்தப்பட்ட வங்கிகள் இது தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் வங்கியின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like